ஆன்மிகம்
குபேர அய்யப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை
ஆடி அமாவாசையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொட்டல்குளம் அய்யன்மலை குபேர அய்யப்பசாமி கோவில் மலை அடிவாரத்தில் 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட மூதாதையர் சாந்தி ஹோம சிறப்பு பூஜை நடந்தது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொட்டல்குளம் அய்யன்மலை குபேர அய்யப்பசாமி கோவில் மலை அடிவாரத்தில் 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட மூதாதையர் சாந்தி ஹோம சிறப்பு பூஜை நடந்தது. கலப்பை மக்கள் இயக்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார் தலைமை தாங்கினார். இயக்க பொறுப்பாளர்கள் கார்த்திக் ராஜா, சிவபன்னீர் செல்வன், அ.தி.மு.க. பிரமுகர் பாலகிருஷ்ணன், கோவில் நிர்வாகி தியாகராஜ சுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஏ.பி.எம். குரூப் அதிபர் செல்வகுமார் கலந்து கொண்டார். மேலும் ரஜகிருஷ்ணாபுரம் ஜோசப் சந்திரன், துரைராஜ், பேராசிரியை ரெங்கநாயகி, கூட்டுறவு வங்கி இயக்குனர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக ஏ.பி.எம். குரூப் அதிபர் செல்வகுமார் கலந்து கொண்டார். மேலும் ரஜகிருஷ்ணாபுரம் ஜோசப் சந்திரன், துரைராஜ், பேராசிரியை ரெங்கநாயகி, கூட்டுறவு வங்கி இயக்குனர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.