ஆன்மிகம்
சோழர்கள் தாங்கள் அமைத்த சிவாலயங்களில் பெருமாளுக்குரிய அஷ்ட பரிவாரங்களில் ஒருத்தியாக மகாலட்சுமியை அமைத்து வழிபட்டனர்.
சோழர்கள் தாங்கள் அமைத்த சிவாலயங்களில் பெருமாளுக்குரிய அஷ்ட பரிவாரங்களில் ஒருத்தியாக மகாலட்சுமியை அமைத்து வழிபட்டனர். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள பெரும்பாலான சோழர் காலச்சிவன் திருக்கோவில்களில் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கிக் கஜலட்சுமி அமைந்திருப்பதைக் காணலாம்.
திருமகளோடு தொடர்புடைய சிவத்தலங்களின் தீர்த்தங்கள் ‘லட்சுமி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகின்றன. திருப்புத்தூர், பனையூர், திருவாரூர் (கமலாலயம்), திருநின்றவூர் முதலிய தலங்களில் “லட்சுமி தீர்த்தங்கள்” உள்ளன.
ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதர் ஆலயத்தில் லட்சுமி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது. அக்குளக்கரையில் லட்சுமி தேவியின் ஆலயம் உள்ளது.
லட்சுமியின் தவ வலிமை கண்ட சிவன் பத்துக்கரங்களுடன் ‘லட்சுமி தாண்டவம்’ என்ற நடனத்தை ஆடினார் எனத் திருப்புத்தூர்ப் புராணம் எடுத்துரைக்கிறது.
திருமகளோடு தொடர்புடைய சிவத்தலங்களின் தீர்த்தங்கள் ‘லட்சுமி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகின்றன. திருப்புத்தூர், பனையூர், திருவாரூர் (கமலாலயம்), திருநின்றவூர் முதலிய தலங்களில் “லட்சுமி தீர்த்தங்கள்” உள்ளன.
ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதர் ஆலயத்தில் லட்சுமி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது. அக்குளக்கரையில் லட்சுமி தேவியின் ஆலயம் உள்ளது.