ஆன்மிகம்
பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்த தேர்த்திருவிழா
தலைவாசல் பட்டுதுறை ரோடு அம்மன் நகரில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 31-ம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்தனர்.
தலைவாசல் பட்டுதுறை ரோடு அம்மன் நகரில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 31-ம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அய்யனார், சடையப்ப சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு, பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம், 108 பால்குட ஊர்வலம், அக்னிகரகம், பூங்கரக ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றது.
விழாவில் நேற்று வாண வேடிக்கை, மேளதாளம், பம்பை மேளத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்தனர். அப்போது இளைஞர்கள் ஆடிப்பாடி வந்தனர். தேரோட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் நேற்று வாண வேடிக்கை, மேளதாளம், பம்பை மேளத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்தனர். அப்போது இளைஞர்கள் ஆடிப்பாடி வந்தனர். தேரோட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.