ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அந்த கொடி மரத்துக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் 7 மணி அளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. 4-ம் திருநாளான வருகிற 14-ந் தேதி இரவு 8 மணி அளவில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது.
20-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்பாள் ஆயிரம்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அந்த கொடி மரத்துக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் 7 மணி அளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. 4-ம் திருநாளான வருகிற 14-ந் தேதி இரவு 8 மணி அளவில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது.
20-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்பாள் ஆயிரம்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.