ஆன்மிகம்

திருப்பதி சுவாமி புஷ்கரணி

Published On 2019-02-25 09:56 GMT   |   Update On 2019-02-25 09:56 GMT
திருப்பதி கோவிலின் இடப்புறம் அமைந்துள்ளது சுவாமி புஷ்கரணி தீர்த்தம். இந்த சுவாமி புஷ்கரணியின் வடகரையில்தான் ஆதிவராக சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
திருப்பதி கோவிலின் இடப்புறம் அமைந்துள்ளது இந்த சுவாமி புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த சுவாமி புஷ்கரணியின் வடகரையில்தான் ஆதிவராக சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த திருக்குளத்தில் உள்ள தண்ணீர் மிகவும் தெளிந்த நிலையில் அமுதத்திற்கு நிகரான சுவையுடன் அமைந்திருக்கிறது. வேங்கடமலையின் அடர்ந்த மலையிலிருந்து ஓடிவரும் சுனைநீர் அங்குள்ள அற்புதமான மூலிகைகளின்மேல் பட்டு ஓடிவருவதால் இந்நீர் பல மூலிகைகளின் அற்புதங்களைத் தன்னிடத்தே கொண்ட ஓர் அற்புதத் தீர்த்தமாக திகழ்கிறது.

 நோய் தீர்க்கும் தன்மையுள்ள இத்திருக்குளத்தில் நீராடுவதால், சகல பாவங்களும் நீங்குவதன்றி, உடலின் நோய்களும் நீங்கப்பெறும் தன்மையைப் பெறுகின்றன. இத்தகைய அற்புதமான புஷ்கரணி போன்று கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்திலும் தீர்த்தக்குளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 60 லட்சம் ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளனர். இன்னும் தீர்த்தக்குளம் பணி தொடங்கப்படவில்லை. புஷ்கரணி அமைக்கப்பட்டுவிட்டால் கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்தின் அழகு மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News