ஆன்மிக களஞ்சியம்

தீர்க்க சுமங்கலி வரம் பெற..... வரலட்சுமி விரதம் கடைபிடிங்க!

Published On 2024-04-29 11:10 GMT   |   Update On 2024-04-29 11:10 GMT
  • இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.
  • ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப் பட்டாள்.

விஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்து செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும்.

விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள்.

லட்சமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள்.

விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே லட்சுமி ஆகும்.

தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

லட்சுமி தேவி பாற்கடலில் தோன்றினாள்.

இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.

ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப் பட்டாள்.

தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக் குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதென கருதி நடந்தாள்.

இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

Tags:    

Similar News