ஆன்மிக களஞ்சியம்

பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடி வருவாள் தேவி லட்சுமி

Published On 2024-04-29 11:12 GMT   |   Update On 2024-04-29 11:12 GMT
  • பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.
  • கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு அஷ்ட லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர்.

எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.

லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது.

அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள்.

கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.

வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும்.

ஆடி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட 16ந் தேதி வரலட்சுமி விரதம் தினமாகும்.

சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது.

இதை செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும்.

கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப்பெறுவார்கள்.

இது தொடர்பான மேலும் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

Tags:    

Similar News