ஆன்மிகம்

மனிதனின் சுவாசம் இறைவன்

Published On 2019-02-22 06:12 GMT   |   Update On 2019-02-22 06:12 GMT
மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுகிறான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கு 900 முறை மூச்சு விடுகிறான்.
மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுகிறான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கு 900 முறை மூச்சு விடுகிறான். அந்த கணக்குப்படி பார்த்தால், மனிதன் ஒரு நாளைக்கு 21 ஆயிரத்து 600 முறை மூச்சு விடுகிறான். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாக இருக்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், அம்பலத்தின் மேல் கூரை பொன்னால் வேயப்பட்டது. அதில் பல ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும். அதே போல் திருப் பெருந்துறை என்ற ஊரில் உள்ள ஆலயத்திற்கு ஆத்மலிங்கம் என்று பெயர். இந்த ஆலயத்தின் விமானத்திலும் கூட ஆணிகள் அடிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். இந்த இரண்டு ஆலயங்களிலும் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 21 ஆயிரத்து 600.
Tags:    

Similar News