ஆன்மிகம்

தீபாவளியன்று வீடுகளில் தீபம் ஏற்றுவது ஏன்?

Published On 2018-11-02 09:31 GMT   |   Update On 2018-11-02 09:31 GMT
தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.
நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள்.

அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலட்சுமி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். தீப வடிவாக இருந்த ஜோதிலட்சுமியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிபோனார்கள் அசுரர்கள்.

திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றிவைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News