ஆன்மிகம்

வில்லியனூரில் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2018-06-28 09:29 GMT   |   Update On 2018-06-28 09:29 GMT
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜையும், மாலையில் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலாயும் நடைபெற்று வரு கிறது.

கடந்த 24-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சியும், 26-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று இரவு பெருமாள், திருமங்கை ஆழ்வார் குதிரை வாகனத்தில் வீதி உலா மற்றும் வேடுபரி உற்சவம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடை பெற்றது.

தேரோட்டத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தில் சுகுமாறன் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீராமானுஜர்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர் கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

1-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 2-ந் தேதி விடை யாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி ராமதாஸ் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News