ஆன்மிகம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட கோவிலில் ஆனி மாத திருவிழா நாளை நடைபெறுகிறது

Published On 2018-06-23 07:53 GMT   |   Update On 2018-06-23 07:53 GMT
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) 169-வது ஆனி மாத திருவிழா நடைபெறுகிறது.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) 169-வது ஆனி மாத திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி நாளை காலை 6 மணியளவில் பணிவிடை உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை உச்சிப்படிப்பு நடைபெறுகிறது.

மாலை 3.30 மணிக்கு தர்ம பெட்டக தர்மவான்களுக்கு பரிவர்த்தனை செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது. மாலை 5.30 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 
Tags:    

Similar News