ஆன்மிகம்

பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

Published On 2018-05-09 10:01 GMT   |   Update On 2018-05-09 10:01 GMT
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்று கந்த புராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* தெளிவான அறிவோடு இருக்க வேண்டும்.

* எல்லோரிடமும் அமைதியாகவும், இனிமையாகவும் பேச வேண்டும்.

* உணர்ச்சியை வென்றவனாக நடந்துகொள்ள வேண்டும்.

* எவரிடமும் எந்த விதத்திலும் பகைமை பாராட்டா திருக்க வேண்டும்.

* எப்பொழுதும் கருணை கொண்ட மனதுடன் இருக்க வேண்டும்.

* தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும்.

* நல்ல காரியங்கள் செய்பவனாகவும், பிறர் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவனாகவும் இருக்க வேண்டும்.

* எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும், ஏற்றத் தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும்.

* ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும்.

* பிறர் குறைகளைப் பற்றி கவலைப்படாமல் அவனுக்கு உதவ முன்வர வேண்டும்.
Tags:    

Similar News