ஆன்மிகம்

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் 27-ந்தேதி தேரோட்டம்

Published On 2018-04-24 07:22 GMT   |   Update On 2018-04-24 07:22 GMT
திருவள்ளூர் வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழாவை முன்னிட்டு 27-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் பெருமாள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தரிசனம் நடந்தது.

ஏழாம் நாளான வருகிற 27-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 29-ந்தேதி காலை 10 மணிக்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரியும், 30-ந்தேதி இரவு 8 மணிக்கு கண்ணாடி பல்லக்கும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News