ஆன்மிகம்
திருப்பரங்குன்றம்: தங்கக்குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று பங்குனி உத்திரம் நடைபெற்றது.
அப்போது தெய்வானையுடன் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் இரவு 7 மணியளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹார லீலை நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு கீரிடம் சூட்டி செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கிறது.
அப்போது தெய்வானையுடன் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் இரவு 7 மணியளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹார லீலை நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு கீரிடம் சூட்டி செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கிறது.