ஆன்மிக களஞ்சியம்

ஐம்புலன்களையும் அடக்கி சிவ சிந்தனையில் ஈடுபட....

Published On 2024-05-07 11:10 GMT   |   Update On 2024-05-07 11:10 GMT
அந்த நாளில் முடிந்த அளவு ஐம்புலன்களையும் அடக்கி சிவ சிந்தனையில் ஈடுபட்டால் உங்கள் ஆயுளும், ஆரோக்கியமும் கூடும்.

சுத்தநீர் அபிஷேகம் பத்து வகை பாவங்களையும், பால் அபிஷேகம் நூறு பாவங்களையும், தயிர் ஆயிரம் பாவங்களையும், நெல் பத்தாயிரம் பாவங்களையும், இளநீர் ஒரு லட்சம் கோடி பாவங்களையும், சந்தனம் சகல பாவங்களையும் அகற்றும் என்றார் ஆதிசங்கரர்.

தைலம் பக்தியையும், பழங்கள் மக்கள் வசீகரத்தையும், பஞ்சாமிர்தம் ஆயுளையும், பால் நல்ல குணத்தையும், தயிர் உடல் நலத்தையும், தேன் இசைத் திறனையும், இளநீர் குழந்தைப் பேறையும், விபூதி நல்லறிவையும், சந்தனம் சுகவாழ்வையும், பஞ்சகவ்யம் கல்வித் திறனையும், பன்னீர் புகழையும் தரும் என தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன.

இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், மலர், வில்வமாலை, சந்தனம் சாற்றி சிவார்ச்சனை செய்யும் போது ருத்ராட்சம் அணிந்து விபூதி தரித்து ஓம் நமச்சிவாய மந்திரத்துடன் சிவ பதிகங்களை ஓதி நலன்களை பல பெற வேண்டும்.

மகா சிவராத்திரி அன்று இரவு கண் விழிப்பதாகக் கூறியபடி இளைய தலைமுறையினர் திரைப் படங்களைக் காணச் செல்கின்றனர்.

அந்த நாளில் முடிந்த அளவு ஐம்புலன்களையும் அடக்கி சிவ சிந்தனையில் ஈடுபட்டால் உங்கள் ஆயுளும், ஆரோக்கியமும் கூடும்.

வாழ்நாள் இனிதாகும். ஓம் நம சிவாய.

Tags:    

Similar News