ஆன்மிகம்

சிவராத்திரி - நான்கு யாம வழிபாட்டுக்கு தேவையான திரவியங்கள்

Published On 2018-02-13 06:55 GMT   |   Update On 2018-02-13 06:55 GMT
சிவராத்திரியான இன்று சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
சிவராத்திரியான இன்று சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
 
முதல் யாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் -- சோமாஸ்கந்தர்
அபிஷேகம் -- பஞ்சகவ்யம்
அலங்காரம் -- வில்வம்
அர்ச்சனை -- தாமரை, அலரி
நிவேதனம் -- பால் அன்னம்,சக்கரைபொங்கல்
பழம் -- வில்வம்
பட்டு -- செம்பட்டு
தோத்திரம் -- இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் -- பச்சைக் கற்பூரம்,தேர்ந்த சந்தணம்
புகை -- சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி -- புட்பதீபம்

இரண்டாம் யாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் -- தென்முகக் கடவுள்
அபிஷேகம் -- பஞ்சாமிர்தம்
அலங்காரம் -- குருந்தை
அர்ச்சனை -- துளசி
நிவேதனம் -- பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் -- பலா
பட்டு -- மஞ்சள் பட்டு
தோத்திரம் -- யசுர்வேதம் ,கீர்த்தித் திருவகவல்
மணம் -- அகில், சந்தனம்
புகை -- சாம்பிராணி, குங்குமம்
ஒளி -- நட்சத்திரதீபம்



மூன்றாம் யாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் -- லிங்கோற்பவர்
அபிஷேகம் -- தேன், பாலோதகம்
அலங்காரம் -- கிளுவை, விளா
அர்ச்சனை -- மூன்று இதழ்வில்வம்,சாதி மலர்
நிவேதனம் -- எள்அன்னம்
பழம் -- மாதுளம்
பட்டு -- வெண்பட்டு
தோத்திரம் -- சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் -- கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை -- மேகம், கருங் குங்கிலியம்
ஒளி -- ஐந்துமுக தீபம்

நான்காம் யாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் -- சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் -- கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் -- கரு நொச்சி
அர்ச்சனை -- நந்தியாவட்டை
நிவேதனம் -- வெண்சாதம்
பழம் -- நானாவித பழங்கள்
பட்டு -- நீலப் பட்டு
தோத்திரம் --அதர்வணவேதம்,போற்றித் திருவகவல்
மணம் -- புணுகு சேர்ந்த சந்தணம்
புகை -- கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி -- மூன்று முக தீபம்
Tags:    

Similar News