ஆன்மிகம்
அஷ்டமியில் பவனி வரும் மீனாட்சி அம்மன்
மதுரை சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் சகல ஜீவராசிகளுக்கும் ஆண்டில் ஒருநாள் பவனி வருகின்றனர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த திதி அஷ்டமி.
தாய், தந்தையின் அம்சமாக கருதப்படுபவர்கள், மதுரை சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும். அவர்கள் உலக மக்களாகிய, தங்களின் பிள்ளைகளுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் ஆண்டில் ஒருநாள் பவனி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த திதி அஷ்டமி. நாம் எந்த சுப நிகழ்ச்சியையும் அஷ்டமியில் நடத்துவதில்லை. நாம் தான் எதை செய்ய வேண்டுமானாலும் நாள், நட்சத்திரம் பார்க்கிறோம்.
ஆண்டவன் அதையெல்லாம் பார்ப்பதில்லை. அவனுக்கு எல்லா நாட்களும் நல்ல நாட்களே. இறைவன் தன்னால் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு, கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவன். அதற்காகவே, உலக மக்களைச் சந்திக்க வருகிறான்.