ஆன்மிகம்
பெரும்பாறை அருகே வரதராஜபெருமாள் கோவில் திருவிழா
வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வரதராஜபெருமாள், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், அரிசிமாவு, பால், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது.
பெரும்பாறை அருகே உள்ள பள்ளத்துக்கால்வாய் பகுதியில் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் உள்ளிட்டவைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பெண்கள் கோவில் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். அதை தொடர்ந்து வரதராஜபெருமாள், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், அரிசிமாவு, பால், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது.
பின்னர் வரதராஜபெருமாள், ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு மேல் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.
பின்னர் வரதராஜபெருமாள், ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு மேல் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.