ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜை
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி 5 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின் போது 5 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி இந்த மாத சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பைரவருக்கு சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனப்பொடி, அரிசிமாவு, பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் முழுங்க பைரவரை வழிபட்டனர். இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன்படி இந்த மாத சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பைரவருக்கு சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனப்பொடி, அரிசிமாவு, பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் முழுங்க பைரவரை வழிபட்டனர். இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.