ஆன்மிகம்
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தெப்ப உற்சவம்
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நடைபெற்றது.
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 18-ந் தேதி தேரோட்டம் நடை பெற்றது. இதில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இந்த விழாவில் நேற்று முன்தினம் இரவு செங்கழுநீர் அம்மன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதையொட்டி செங்கழுநீர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருகிலுள்ள குளத்திற்கு எழுந்தருளினார். அங்கு விசேஷ பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து குளத்தில் 7 முறை தெப்பம் வலம் வந்தது. இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். தெப்ப உற்சவத்தின் முடிவில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த விழாவில் நேற்று முன்தினம் இரவு செங்கழுநீர் அம்மன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதையொட்டி செங்கழுநீர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருகிலுள்ள குளத்திற்கு எழுந்தருளினார். அங்கு விசேஷ பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து குளத்தில் 7 முறை தெப்பம் வலம் வந்தது. இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். தெப்ப உற்சவத்தின் முடிவில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.