ஆன்மிகம்
குமாரலெட்சுமிபுரம் முத்தாரம்மன் கோவில் மண்டல பூஜை பூர்த்தி விழா
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள குமாரலெட்சுமிபுரம் முத்தாரம்மன் கோவில் 48 நாள் மண்டல பூஜை பூர்த்தி விழா ஆண்டவர் சுவாமி தலைமையில் நடைபெற்றது.
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள குமாரலெட்சுமிபுரம் முத்தாரம்மன் கோவில் 48 நாள் மண்டல பூஜை பூர்த்தி விழா ஆண்டவர் சுவாமி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் காலை 9 மணிக்கு மங்கள வாத்தியம் கணபதி ஹோமம், துர்க்கா பூஜை, 108 சங்கு பூஜை, 108 கலச பூஜை, பூர்ணாஹுதி. பகல் 10மணிக்கு திரவிய அபிசேகம், 108 சங்கு அபிசேகம், 108 கலச அபிசேகம், 11மணிக்கு கும்பாபிசேகம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
இரவு 7மணிக்கு படை கஞ்சி ஊற்றுதல், தொடர்ந்து அன்னதானம் வழங்குதல், இரவு 12மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடைபெற்றது,
விழாவில் மெஞ்ஞானபுரம் தமிழ்நாடு மெர்க் கண்டைல் வங்கி மேலாளர் காந்தி, மெஞ்ஞானபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, செம்மறிக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெயக்கனி முத்துமணி, மகாராஜன் நாடார், ராமசந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவாஸ்கர் நாடார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா முத்துமணி நாடார், திருப்பணிக்குழு தலைவர் ராமசாமிநாடார், ஊர் தலைவர் அரிராமசந்திரன் நாடார், துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் காலை 9 மணிக்கு மங்கள வாத்தியம் கணபதி ஹோமம், துர்க்கா பூஜை, 108 சங்கு பூஜை, 108 கலச பூஜை, பூர்ணாஹுதி. பகல் 10மணிக்கு திரவிய அபிசேகம், 108 சங்கு அபிசேகம், 108 கலச அபிசேகம், 11மணிக்கு கும்பாபிசேகம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
இரவு 7மணிக்கு படை கஞ்சி ஊற்றுதல், தொடர்ந்து அன்னதானம் வழங்குதல், இரவு 12மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடைபெற்றது,
விழாவில் மெஞ்ஞானபுரம் தமிழ்நாடு மெர்க் கண்டைல் வங்கி மேலாளர் காந்தி, மெஞ்ஞானபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, செம்மறிக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெயக்கனி முத்துமணி, மகாராஜன் நாடார், ராமசந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவாஸ்கர் நாடார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா முத்துமணி நாடார், திருப்பணிக்குழு தலைவர் ராமசாமிநாடார், ஊர் தலைவர் அரிராமசந்திரன் நாடார், துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர்.