ஆன்மிகம்
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம்
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சேர்ந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. மாலை 5.30 மணி அளவில் தாயார் மூலஸ் தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 5.45 மணி முதல் மாலை 6.45 மணி முடிய அலங்காரம் அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடந்தது.
அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பதேரில் தாயார் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்தார். இரவு 7.45 மணி அளவில் இந்நிகழ்ச்சி முடிவடைந்தது.
தெப்ப உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். தாயார் வலம் வரும் போது தெப்பத்தை சுற்றி நின்று பக்தர்கள் பய பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
தெப்ப உற்சவம் முடிந்ததும் தெப்ப மண்டபத்திற்கு இரவு 8.15 மணி அளவில் தாயார் வந்தடைந்தார். தெப்ப மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்தார். சாமி வீதி உலாவின் போது தெருக்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். வீதி உலா இரவு 9.45 மணிக்கு முடிவடைந்ததும் தாயார் மண்டபம் வந்தடைந்தார்.
இரவு 10 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சேர்ந்தடைந்தார். விழாவின் நிறைவு நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தாயார் திருமஞ்சனம் கண்டருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8.45 மணி அளவில் பல்லக்கில் வீதி உலா வருகிறார்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. மாலை 5.30 மணி அளவில் தாயார் மூலஸ் தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 5.45 மணி முதல் மாலை 6.45 மணி முடிய அலங்காரம் அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடந்தது.
அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பதேரில் தாயார் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்தார். இரவு 7.45 மணி அளவில் இந்நிகழ்ச்சி முடிவடைந்தது.
தெப்ப உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். தாயார் வலம் வரும் போது தெப்பத்தை சுற்றி நின்று பக்தர்கள் பய பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
தெப்ப உற்சவம் முடிந்ததும் தெப்ப மண்டபத்திற்கு இரவு 8.15 மணி அளவில் தாயார் வந்தடைந்தார். தெப்ப மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்தார். சாமி வீதி உலாவின் போது தெருக்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். வீதி உலா இரவு 9.45 மணிக்கு முடிவடைந்ததும் தாயார் மண்டபம் வந்தடைந்தார்.
இரவு 10 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சேர்ந்தடைந்தார். விழாவின் நிறைவு நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தாயார் திருமஞ்சனம் கண்டருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8.45 மணி அளவில் பல்லக்கில் வீதி உலா வருகிறார்.