ஆன்மிகம்

திருக்காமீசுவரர் கோவிலில் சூரிய வழிபாடு

Published On 2017-03-24 04:59 GMT   |   Update On 2017-03-24 04:59 GMT
திருக்காமீசுவரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத சூரிய வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக இந்த சூரிய வழிபாடு நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சூரிய வழிபாடு நடைபெறுவது வழக்கம். மூலவர் திருக்காமீசுவரரை சூரியன் வந்து வழிபடுவதாக கருதி இந்த சூரிய வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டும் திருக்காமீசுவரர் கோவிலில் பங்குனி மாத சூரிய வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக இந்த சூரிய வழிபாடு நடைபெற்றது. அப்போது மூலவர் திருக்காமீசுவரர் சிலை மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்தன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இந்த சூரிய வழிபாடு 3-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

Similar News