ஆன்மிகம்

ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 27 ஆயிரம் வடைகளால் அலங்காரம்

Published On 2017-02-27 06:25 GMT   |   Update On 2017-02-27 06:25 GMT
கும்பகோணம் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் மாசிமாத அமாவாசையான நேற்று 27ஆயிரம் வடைகளை கொண்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டது.
கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மழை பெய்து நீர்வளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி மாசிமாத அமாவாசையான நேற்று 27ஆயிரம் வடைகளை கொண்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ராமநாம ஜபம், சகஸ்ர நாம அர்ச்சனை ஆகியவை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அமாவாசை தினத்தில் உரிக்காத முழுதேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்தால் நினைத்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் நேற்று திரளான பக்தர்கள் மட்டைதேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர்.

Similar News