ஆன்மிகம்
பகவதி அம்மன் கோவிலில் கேரள பெண் பக்தர்கள் பொங்கலிட்ட போது எடுத்த படம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரள பக்தர்கள் குவிந்தனர்

Published On 2017-02-16 02:50 GMT   |   Update On 2017-02-16 02:50 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரள பக்தர்கள் குவிந்தனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் மாசி கொடைவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது. மார்ச் 7-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

இக்கோவில் திருவிழா நெருங்கி வருவதால் திருவிழா கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு உள்ளது. கோவிலில் திருப்பணி வேலைகளும், வர்ணம் பூசும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் கோவிலில் கேரள பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சுற்றுலா வாகனங்களிலும், பஸ்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு அம்மனுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர்.

Similar News