ஆன்மிகம்
அகத்திய சிவசித்தர் சாமிகளுக்கு மரியாதை செலுத்தியதையும், கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்ததையும் காணலாம்.

புழல் காவாங்கரை உச்சிஷ்ட மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-02-13 07:39 GMT   |   Update On 2017-02-13 07:39 GMT
புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் உள்ள உச்சிஷ்ட மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் உள்ள உச்சிஷ்ட மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் முதல் கால யாக சாலை வேள்வியும், அன்னதானமும் நடந்தது. 2-ம் நாள் காலை இராண்டாம் கால யாக பூஜையும், மாலையில் 3-வது கால யாக பூஜையும் நடந்தது.
3-ம் நாள் சாமிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து கும்பாபிஷேகமும் புதுக் கோட்டை பொன்அமராவ தியில் உள்ள அகத்திய சிவ சித்தரின் குரு பூஜை நடந்தது.
விழா நாட்களில் தொடர்ந்து பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை குணராஜா என்ற குணால், வக்கீல் ராஜேஷ், தேஜ்ராஜ் ஜெயின், தங்கபாண்டியன், கன்னியப்பன், வேலன்பிரபு, இரா.அருள்நிதி மற்றும் விழாக் குழுவினர் கண்ணப்பசாமி பக்தர்கள் செய்திருந்தனர்.

Similar News