ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு, பக்தி முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் உள்புறம் உள்ள மேல் தளங்களில் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக, இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி அட்டை வைத்திருந்த பக்தர்கள் கோவிலின் கிழக்கு கோபுரம், தெற்கு கோபுரம், வடக்கு ராஜ கோபுரங்களின் பிரதான வாயில்கள் வழியாக உள்ளே வந்து, 7 நுழைவு வாயில்கள் மூலம் கும்பாபிஷேக தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு, பக்தி முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக பக்தர்கள் ‘அரோகரா கோஷம்’ முழங்கி கிரிவலம் சென்றனர்.