ஆன்மிகம்
காளிகாம்பாள் கோவிவில் நவராத்திரி விழா
காளிகாம்பாள் கோவிவில் நவராத்திரி விழா 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் வருகிற 2ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
இதில் ஒவ்வொரு 3 நாட்களிலும் காளிகாம்பாள், துர்காபரமேஸ்வரியாகவும், மகாலட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் காட்சி தருகிறார்.
தினமும் காளிகாம் பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் காலை, மாலை நேரங்களில் ஸ்ரீசதசண்டி மகாயக்ஞம் நடைபெறும்.
மாலையில் இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.