ஆன்மிகம்

பார்வதீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம்

Published On 2016-07-11 03:10 GMT   |   Update On 2016-07-11 03:10 GMT
கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காரைக்கால் மாவட்டம் கோவில்பத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பார்வதீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.

தொடர்ந்து மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News