முக்கிய விரதங்கள்

நாளை குழந்தை பாக்கியம் தரும் ஏகாதசி விரதம்

Published On 2022-08-07 08:43 GMT   |   Update On 2022-08-07 08:43 GMT
  • நாளைய ஏகாதசி விரதத்தின் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.
  • நாளை வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒரு பலன் உண்டு. அந்த வகையில் நாளை (திங்கட்கிழமை) ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவம் உள்ளதாகும். இதன் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பணக்காரர் தனது குறையை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்' என்று கேட்டாராம். அதற்கு அந்த முனிவர், 'கடந்த ஜென்மத்தில் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் நீ அடித்து விரட்டிவிட்டாய். அதனால்தான் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தமாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என்றார்.

அதன்படி அந்த பணக்காரர் ஏகாதசி விரதம் கடை பிடித்து குழந்தை பாக்கியத்தை பெற்றார். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் நாளை ஏகாதசி விரதத்தை கடைபிடித்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். நாளை இந்த விரதத்தை மேம்படுத்த வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் இன்று கலிய நாயனார் குருபூஜை. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News