ஆன்மிகம்

ராகு-கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரநாதர்

Published On 2016-10-18 08:25 GMT   |   Update On 2016-10-18 08:25 GMT
ராகுவும், சேதுவும் ஒரே உடலெடுத்து ஈசனை நெஞ்சில் நிறுத்தி வணங்கி பேறு பெற்றது திருப்பாம்புரம் திருத்தலம்.
பாம்புகள் அனைத்தும் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற பூமி, ராகு-கேதுவுக்கு தனிச் சன்னிதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பாம்புரம் திருத்தலம்.

ராகுவும், சேதுவும் ஒரே உடலெடுத்து ஈசனை நெஞ்சில் நிறுத்தி வணங்கி பேறு பெற்ற தலம் இது. ராகு காலங்களில் இங்குதான் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. ஜாதகத்தில் கால சர்ப தோஷம், களத்திர தோஷம், திருமணத்தடை, புத்திரதோஷம் என ராகு- கேதுவின் கடுமையான தோஷங்கள் எதுவாக இருந்தாலும், இத்தலம் வந்து பரிகார பூஜையை மேற்கொண்டால், அனைத்தும் விலகி நன்மை பெறலாம்.

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் பலன்பெற, நம்பிக்கையோடு வந்து செல்ல வேண்டிய தலம் திருப்பாம்புரம் என்றால் அது மிகையல்ல.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் திருப்பாம்புரம் அமைந்துள்ளது.

Similar News