சினிமா
கலைஞர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - ஜி.வி.பிரகாஷ்
காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தன் வாழ்வில் நிகழ்த்தி காட்டிய அரசியல் பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு .. #ripkalaignar#ripkarunanidhi
— G.V.Prakash Kumar (@gvprakash) August 7, 2018
தற்போது நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், ‘கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தன் வாழ்வில் நிகழ்த்தி காட்டிய அரசியல் பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.