சினிமா

மற்றொரு சகாப்தம் முடிந்தது - திரிஷா

Published On 2018-08-07 13:31 GMT   |   Update On 2018-08-07 13:31 GMT
காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகை திரிஷா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. பின்னர் மாலை 6.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.



இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிந்து வருகிறார்கள். நடிகை திரிஷா மற்றொரு சகாப்தம் முடிந்தது என்று கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News