சினிமா

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள `சங்கமித்ரா' படத்தின் தொடக்க விழா

Published On 2017-05-09 10:06 GMT   |   Update On 2017-05-09 10:06 GMT
சுந்தர்.சி. இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்க உள்ள `சங்கமித்ரா' படத்தின் தொடக்க விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்திய சினிமா வராலாற்றில் ரூ.1227 கோடியை வசூலித்து வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. இன்னமும் திரையங்குகளில் மக்கள் கூட்டம் அலையென கூடி வருகிறது.

இந்திய சினிமாவை பொறுத்த வரையில், ஒரு நேரத்தில் எந்த மாதிரியான படம் ட்ரெண்டாக செல்கிறதோ, அதை பின்பற்றி தொடர்ந்து பல்வேறு படங்கள் வெளியாகும். அந்த வகையில், பாகுபலியை தொடர்ந்து சிம்புவின் `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படமும் இரு பாகங்களாக வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா' படமும் இரு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை 3 பாகங்களாக வெளியிடவும் படக்குழு முயற்சி செய்து வருகிறது. வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101-வது படமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. "மொசர்ட் ஆப் மெட்ராஸ்" என்றழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுத்ததுடன், தங்களது உடல் எடையையும் அதிகரித்து வருகின்றனர். அதேநேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.



இப்படத்தில், ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் படக்குழு, ஸ்ருதி ஹாசனை ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ருதியும் இப்படத்திற்காக லண்டனில் வாள் பயிற்சி எடுத்து வருகிறார்.

ஆக மிகப்ரெிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாக உள்ள இப்படத்தின் தொடக்க விழா அடுத்த வாரம் (மே 18-ல்) பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜுன் முதற்பாதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News