25.3.2024 முதல் 31.3.2024 வரை
சுமாரான வாரம். ராசியில் ராகு உச்சம் பெற்ற அஷ்டமாதிபதி சுக்ரன் மற்றும் ஆறாம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை இருப்பதால் வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும்.சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெறுவார். அரசியல் வாதிகள் வெளிவட்டார செல்வாக்கை அதிகரிக்க ஆடம்பரமாகச் செலவு செய்வார்கள். தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு தோன்றலாம். அவ்வப்போது சிற்சில வாக்குவாதங்கள் பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிக்காது. எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். திருமண முயற்சியை ஓரிரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கவும்.
சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். 27.3.2024 அன்று காலை 2.56 மணி முதல் 29.3.2024 அன்று மதியம் 2.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. சிவ கவசம் படித்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406