செய்திகள்
உக்ரைன் சுரங்கத்தில் வெடிவிபத்து - 17 பேர் பலி
உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #CoalMineBlast
கியில்:
கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர் இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். #CoalMineBlast