செய்திகள்

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தொடர்ந்து முன்னிலை

Published On 2019-05-23 08:54 GMT   |   Update On 2019-05-23 08:54 GMT
ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெங்கு மணிமாறனும், தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார்.

ஈரோடு தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் இருந்தார்.

இதில் ம.தி.மு.க. வேட்பாளர் 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.

கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 28845

வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 17233

செந்தில்குமார் (அ.ம.மு.க) - 1402

சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 2374

கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 56339

வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 33439

செந்தில்குமார் (அ.ம.மு.க) - 2563

சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 5193

கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 84065

வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 52204

செந்தில்குமார் (அ.ம.மு.க) - 4062

சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 8113

கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 112385

வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 71128

செந்தில்குமார் (அ.ம.மு.க) - 5419

சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10623

4-வது சுற்று முடிவில் கணேசமூர்த்தி அ.தி.மு.க வேட்பாளரை விட 41.257 ஓட்டுகள் அதிகம் பெற்று இருந்தார்.
Tags:    

Similar News