செய்திகள்
மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். #Narayanasamy #PMModi
புதுச்சேரி:
சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தியை மோடி கொச்சைப்படுத்தி பேசியிருப்பது அவருடைய மலிவான அரசியலை காட்டுகிறது. மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரதமர் பல முறை பேசி உள்ளார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மோடிக்கு ஆதரவாக செயல்படுவதை காட்டுகிறது.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்திற்கு சென்றபோது அவரை தாக்கியிருப்பது கண்டனத்திற்கு உரியது. டெல்லியில் முதல்-மந்திரிக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி அடையும். பா.ஜ.க. தோல்வி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #PMModi
சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தியை மோடி கொச்சைப்படுத்தி பேசியிருப்பது அவருடைய மலிவான அரசியலை காட்டுகிறது. மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரதமர் பல முறை பேசி உள்ளார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மோடிக்கு ஆதரவாக செயல்படுவதை காட்டுகிறது.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்திற்கு சென்றபோது அவரை தாக்கியிருப்பது கண்டனத்திற்கு உரியது. டெல்லியில் முதல்-மந்திரிக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி அடையும். பா.ஜ.க. தோல்வி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #PMModi