செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது

Published On 2018-12-07 07:29 GMT   |   Update On 2018-12-07 07:29 GMT
சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. #ChennaiAirport
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் உள்ள சுவர் கண்ணாடிகள் உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி, 3-வது நுழைவு வாயிலில் மேல்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது. சுமார் 4 அடி நீளம், 7 அடி உயரத்தில் அந்த கண்ணாடி பெயர்ந்து இருந்தது.

அந்த இடத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. உடைந்த கண்ணாடியை விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #ChennaiAirport
Tags:    

Similar News