search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் விசாரணை"

    • குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
    • அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யூனியனுக்கு உட்பட்ட அய்யலூர் அருகே உள்ள களர்பட்டி 7-வது வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 70 மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை உணவு திட்டத்திற்கு மாணவிகளை காலை 8 மணிக்கு வரச் சொல்வதாகவும், தாமதமாக வரும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் வந்தது. இதுகுறித்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இங்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அமைப்பாளராக பணியாற்றி வரும் அம்பிகா என்பவர் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் தண்ணீர் குடத்தில் எடுத்து வரச்சொல்வதாகவும், தாமதமாக வந்தால் உணவு கிடையாது என்றும் கூறியதாக குழந்தைகள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களாகவே இப்பிரச்சினை அடுத்தடுத்து எழுந்த நிலையில் இது குறித்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில் வடமதுரை ஊட்டச்சத்து அங்கன்வாடி மேலாளர்கள், திண்டுக்கல் மண்டல துணைத் திட்ட தாசில்தார் ஆகியோர் நேரடியாக பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தாமதமாக வந்தாலும் உணவு வழங்க வேண்டும் என்று எச்சரித்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரிசி மூட்டைகள் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.
    • அரிசி மூட்டைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் உடன் விரைந்து சென்று பார்த்த பொழுது சாலையில் 6 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடைப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த அரிசி மூட்டைகள் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.

    அந்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்ட பொழுது, அவர் தான் வெளியில் சென்று இருந்ததாகவும் யாரோ மர்ம நபர்கள் கேட்டை திறந்து தனது வீட்டு வாசலுக்குள் போட்டுள்ளதாகவும் இந்த அரிசி மூட்டைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து மொத்தம் 40 கிலோ ரேசன் அரிசியை திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

    ரேசன் அரிசியை வீசி சென்றது யார்? அருகில் உள்ள வீட்டுக்காரருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழல் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இத்திட்ட பயனாளிகளின் (கே.ஓய்.சி) ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவன ஊழியர்கள் இணைய வசதி கொண்ட செல்போன், மடிக்கணினியுடன் சென்று பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் வாழப்பாடி பகுதியில் கடந்த இரு நாட்களாக முகாமிட்டு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என கூறி மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதாக, ஒரு நபருக்கு ரூ. 30 வீதம் பணமும், ஆதார், குடும்ப அட்டை நகல், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றையும் வசூலித்து உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், வாழப்பாடி போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், வசூல் வேட்டை நடத்திய தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் பணம் மற்றும் ஆவணங்கள் வங்கியது உண்மை என தெரியவந்ததால், தனியார் நிறுவன ஊழியர்களை எச்சரித்த அதிகாரிகள், பணத்தையும், ஆவணங்களையும் பொதுமக்களிடமே திருப்பி கொடுக்க உத்தரவிட்டனர். வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், தாசில்தார் சம்பத் ஆகியோரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி காலை பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். இதில், பட்டாசு விபத்துக்கு அருகில் இருந்த ஓட்டலில் காஸ் சிலிண்டர் வெடித்ததே காரணம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், முதற்கட்ட விவசாரணையில் தெரிந்ததாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடி விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதிமுக ராஜ்யசபா எம்பி தம்பிதுரை, இந்த விபத்து குறித்து சிபிஐ., அல்லது என்ஐஏ., விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், பாராளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டதில் பட்டாசு குடோனால் வெடி விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் பல தரப்பினரும் மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக விசாரிக்க கோரிக்கை விடுத்ததையடுத்து நேற்று மாலை வெடி விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் வீட்டில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவன சென்னை தலைமை அலுவலர் தலைமையிலான நான்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டை உள்பக்கம் தாளிட்டு கொண்டு, இறந்த ராஜேஸ்வரியின் கணவர், மகன், மருமகள், மகள் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது, சிலிண்டரால் வெடி விபத்து ஏற்படவில்லை என மனு அளித்துள்ளீர்கள். சிலிண்டரால் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக உங்களை போலீசார் கூற சொல்கிறார்களா? இது குறித்து வேறென்ன தகவல்கள் உள்ளது என்ற கோணத்தில் சுமார் 30 நிமிட நேரம் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், தாசில்தார் சம்பத் ஆகியோரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில அரசின் விசாரணைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த அதிகாரிகளை தவிர்த்துவிட்டு மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரேமா வீட்டிற்கு சென்ற இரணியல் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கானாங்குளத்தங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கேரளாவில் கட்டிட வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பிரேமா (46). இவர்களுக்கு அருண் (20), அனீஸ் (18), அஜின் (15) என 3 மகன்கள் உள்ளனர். இதில் அருண் 12-ம் வகுப்பும், அனீஸ் 11-ம் வகுப்பும், அஜின் 6-ம் வகுப்பும் படித்து முடித்து உள்ளனர். இவர்களுடன் பிரேமாவின் தாயார் வசந்தா (74), அண்ணன் ஜோதி (50) ஆகியோரும் வசித்து வருகின்றனர். ஜோதி உடல் நலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் ஆத்திவிளை ஊராட்சி கவுன்சிலர் பெல்சி என்பவர் நேற்று காலை அப்பகுதியில் வரி வசூல் செய்துள்ளார். அப்போது பிரேமாவின் காம்பவுண்ட் கேட்டை தட்டி உள்ளார். ஆனால் வீட்டில் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. காம்பவுண்ட் கேட்டும் உட்புறமாக பூட்டு போடப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெல்சி ஊராட்சி தலைவர் அகஸ்டினாளுக்கு தகவல் கொடுத்தார்.

    இருவரும் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். தொடர்ந்து அப்பகுதியில் விசாரித்தபோது கொரோனாவுக்கு பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக பிரேமா மற்றும் முருகன் இருவரும் சேர்ந்து 3 மகன்களையும் வீட்டிற்குள் அடைத்து வைத்திருப்பதும், 3 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து அகஸ்டினாள் குழந்தைகள் நல உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இரணியல் காவல் நிலையத்திற்கும், சுகாதார துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் மற்றும் திருவிதாங்கோடு சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    தகவல் அறிந்ததும் இரணியல் பேரூராட்சி தலைவி ஸ்ரீகலா முருகன், வார்டு கவுன்சிலர் சித்ரா, தக்கலை யூனியன் கவுன்சிலர் கோல்டன் மெல்பா மற்றும் ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர்.

    பிரேமா வீட்டிற்கு சென்ற இரணியல் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்களுடன் குழந்தைகள் நல உதவி மைய உறுப்பினர்கள் மேகலா, சரத் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். பின்னர் கலெக்டரிடம் ஆலோசனை நடத்திய பின்பு இச்சம்பவம் குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.

    • சாலையின் ஒரு புறத்தில் 50-க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது
    • கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காரனோடை அருகே உள்ள ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

    சாலையின் ஒரு புறத்தில் 50 க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் விடப்பட்டு உள்ளது.

    இதனால் கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது. அவ்வழியே செல்லும் வாகனங்களில் கழிவுநீர் சிதறி மற்ற வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் இந்த கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து சோழவரம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையாளர் குலசேகரன் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு விசாரணை செய்தார்.

    அப்போது அரசு அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி இல்லாத 12 குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். கால்வாயில் கழிவுநீர் விடுவதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆய்வின்போது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • புகாரை படித்து பார்த்த ஷர்மிகா, சில விளக்கங்களை அளித்தார்.
    • ஷர்மிகா தனது தரப்பு விளக்கத்தை அளித்த பின்பு அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    'மருத்துவ டிப்ஸ்' என்ற பெயரில் சித்தா டாக்டர் ஷர்மிகா 'யூடியூப்'பில் பேசி வருகிறார்.

    நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புறப்படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், ஒரு 'குலாப் ஜாமுன்' சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என பல்வேறு சர்ச்சை கருத்துகளை அவர் 'யூடியூப்'பில் கூறி வந்தார்.

    மருத்துவ நடைமுறைக்கு ஒத்துவராத, தவறான தகவல்களை மக்கள் மத்தியில் 'யூடியூப்' மூலம் டாக்டர் ஷர்மிகா கூறி வருவதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் சித்த மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பினர்.

    டாக்டர் ஷர்மிகாவின் சர்ச்சை பேச்சுகள் அடங்கிய வீடியோக்களையும் அந்த புகாருடன் அனுப்பி இருந்தனர். இந்த புகாரை பரிசீலித்த இந்திய மருத்துவ இயக்குனரகம் இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ இயக்குனரகத்தில் டாக்டர் ஷர்மிகா நேற்று நேரில் ஆஜரானார்.

    இந்திய மருத்துவ இயக்குனர் எஸ்.கணேஷ் தலைமையில் இணை இயக்குனர் பார்த்திபன், சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் கனகவல்லி, மாநில மருந்து அலுவலர் (இந்திய மருத்துவம்) ஒய்.ஆர்.மானக்சா, சென்னை மருந்து ஆய்வாளர் சுசி கண்ணம்மா ஆகியோர் அடங்கிய குழு ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தியது.

    அப்போது மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதேபோன்று புகார் குறித்த நகல்களும் அவருக்கு அளிக்கப்பட்டன. புகாரை படித்து பார்த்த ஷர்மிகா, சில விளக்கங்களை அளித்தார். இதனை அதிகாரிகள் குழு பதிவு செய்து கொண்டது.

    அதே வேளையில் தனது விளக்கத்தை பிப்ரவரி 10-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் அதிகாரிகள் குழு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஷர்மிகா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த விசாரணை குறித்து இந்திய மருத்துவ இயக்குனர் எஸ்.கணேஷ் கூறும்போது, 'டாக்டர் ஷர்மிகா மீதான புகார் தொடர்பாக அதிகாரிகள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். இருந்தபோதிலும் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளோம்.

    ஷர்மிகா தனது தரப்பு விளக்கத்தை அளித்த பின்பு அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    • மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • கடத்தலில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து போதைப்பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனை தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் 10 டன் எடையிலான ரூ.1.75 கோடி மதிப்பிலான பாப்பி சீட் எனும் போதைப்பொருள் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது.

    இதனை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போதை பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்? யார்?, இந்த போதை பொருள் எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது? இதில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் தூத்துக்குடி மற்றும் மதுரையில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மாணவிகள் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு அக்கவுண்டன்சி ஆசிரியர் செக்ஸ் பாடம் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
    • குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் இன்று காலை பள்ளிக்கு நேரில் சென்றனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள், குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு அக்கவுண்டன்சி ஆசிரியர் செக்ஸ் பாடம் நடத்தியதாக புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த மாணவிகள், குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பெற்றோருடன் சென்று தனித்தனியாக புகார் அளித்து உள்ளனர்.

    இதையடுத்து பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையில் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் இன்று காலை பள்ளிக்கு நேரில் சென்றனர். அவர்கள் புகார் கூறப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×