search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சோழவரம் அருகே மழைநீர் கால்வாயில் விடப்பட்ட கழிவுநீரால் துர்நாற்றம்- அதிகாரிகள் விசாரணை
    X

    மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீரை அதிகாரிகள் பார்வையிட்டபோது எடுத்த படம்

    சோழவரம் அருகே மழைநீர் கால்வாயில் விடப்பட்ட கழிவுநீரால் துர்நாற்றம்- அதிகாரிகள் விசாரணை

    • சாலையின் ஒரு புறத்தில் 50-க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது
    • கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காரனோடை அருகே உள்ள ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

    சாலையின் ஒரு புறத்தில் 50 க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் விடப்பட்டு உள்ளது.

    இதனால் கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது. அவ்வழியே செல்லும் வாகனங்களில் கழிவுநீர் சிதறி மற்ற வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் இந்த கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து சோழவரம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையாளர் குலசேகரன் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு விசாரணை செய்தார்.

    அப்போது அரசு அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி இல்லாத 12 குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். கால்வாயில் கழிவுநீர் விடுவதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆய்வின்போது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×