பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியரிடம் விசாரணை

மாணவிகள் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு அக்கவுண்டன்சி ஆசிரியர் செக்ஸ் பாடம் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் இன்று காலை பள்ளிக்கு நேரில் சென்றனர்.
பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியரிடம் விசாரணை
Published on

இரணியல்:

இரணியல் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள், குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு அக்கவுண்டன்சி ஆசிரியர் செக்ஸ் பாடம் நடத்தியதாக புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த மாணவிகள், குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பெற்றோருடன் சென்று தனித்தனியாக புகார் அளித்து உள்ளனர்.

இதையடுத்து பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் இன்று காலை பள்ளிக்கு நேரில் சென்றனர். அவர்கள் புகார் கூறப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com