செய்திகள்

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் ஆசி பெற்றார் மோடி

Published On 2019-05-24 06:07 GMT   |   Update On 2019-05-24 06:07 GMT
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி இன்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் வாழ்த்து பெற்றார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்புகளின்படி அபாரமான மெஜாரிட்டியுடன் மத்தியில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும்  முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று ஆசி பெற்றார். அவருடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் சென்றிருந்தார்.



இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில் ‘இவர்களைப் போன்ற மிக உயர்ந்த தலைவர்கள் கட்டமைக்கவும் புதிய சித்தாந்தங்களின் மூலம் மக்களை ஈர்க்கவும் முன்னர் ஆற்றிய அரும்பணிகளால்தான் இன்று பாஜகவின் இந்த வெற்றி சாத்தியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News