செய்திகள்
உபியில் குடியிருப்பில் மின் கசிவு -ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் உள்ள குடியிருப்பில் மின் கசிவு ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி பலியாகினர். #UPFireAccident
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் மாயாவதி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்றிரவு ஒரு வீட்டின் மின்சார ஒயர்களில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவு சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள அனைத்து ரூம்களின் ஒயர்களிலும் வேகமாக பரவியது.
இதையடுத்து வீட்டின் சமையலறையில் அதிக அளவு மின்சாரம் கசியவே, அது கேஸ் அடுப்பில் விழுந்தது. இதனால் தீப்பற்றிய கேஸ் வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் மாயாவதி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்றிரவு ஒரு வீட்டின் மின்சார ஒயர்களில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவு சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள அனைத்து ரூம்களின் ஒயர்களிலும் வேகமாக பரவியது.
இதையடுத்து வீட்டின் சமையலறையில் அதிக அளவு மின்சாரம் கசியவே, அது கேஸ் அடுப்பில் விழுந்தது. இதனால் தீப்பற்றிய கேஸ் வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்புத்துறையினருடன் விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி அருகிலிருக்கும் குடியிருப்புகளுக்கு பரவாத வண்ணம் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், போலீசார் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். #UPFireAccident