செய்திகள்

திருப்பதியில் கனமழை

Published On 2018-11-22 09:48 GMT   |   Update On 2018-11-22 09:48 GMT
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருமலை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. #Tirupati #Rain
திருப்பதி:

திருமலை மற்றும் திருப்பதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருமலை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்தும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மழை காரணமாக கோவில் மகாதுவாரம், மாடவீதிகள் உள்ளிட்ட பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியது. பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தரிசனத்துக்கு சென்றனர். தொடர்ந்து மழை பெய்த நிலையில், திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது.

கனமழை காரணமாக திருமலை மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.  #Tirupati #Rain

Tags:    

Similar News