செய்திகள்
பொள்ளாச்சி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
பொள்ளாச்சி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மனைவியுடன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம் பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ் (46) வியாபாரி. இவரது மனைவி வேணி (45). இவர்களது 11 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு தந்தை பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக தனது தாயாரிடம் மாணவி தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து எதுவும் கண்டு கொள்ளவில்லை. கணவரையும் கண்டிக்காமல் இருந்துள்ளார்.
இது குறித்து மாணவி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை கணேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை பேரூர் அருகே உள்ள பீடம்பள்ளியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23). கூலித் தொழிலாளி.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த 16 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் பழனியில் வைத்து திருமணம் செய்தார்.
தனது மகளை சரவணன் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் தாய் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
நேற்று பாப்பம்பட்டி பிரிவு அருகே பஸ்சுக்காக காத்து இருந்த போது போலீசார் சரவணனை மடக்கி பிடித்தனர். அவருடன் இருந்த மாணவியை மீட்டனர்.
பின்னர் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற சரவணன் மீது கடத்தல், பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர். சரவணன் கோவை மத்திய சிறையில் அடைக்ப்பட்டார்.
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம் பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ் (46) வியாபாரி. இவரது மனைவி வேணி (45). இவர்களது 11 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு தந்தை பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக தனது தாயாரிடம் மாணவி தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து எதுவும் கண்டு கொள்ளவில்லை. கணவரையும் கண்டிக்காமல் இருந்துள்ளார்.
இது குறித்து மாணவி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை கணேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை பேரூர் அருகே உள்ள பீடம்பள்ளியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23). கூலித் தொழிலாளி.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த 16 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் பழனியில் வைத்து திருமணம் செய்தார்.
தனது மகளை சரவணன் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் தாய் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
நேற்று பாப்பம்பட்டி பிரிவு அருகே பஸ்சுக்காக காத்து இருந்த போது போலீசார் சரவணனை மடக்கி பிடித்தனர். அவருடன் இருந்த மாணவியை மீட்டனர்.
பின்னர் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற சரவணன் மீது கடத்தல், பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர். சரவணன் கோவை மத்திய சிறையில் அடைக்ப்பட்டார்.