செய்திகள்

புதுவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கடலில் குதித்து தற்கொலை

Published On 2019-04-25 12:23 GMT   |   Update On 2019-04-25 12:23 GMT
புதுவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் எதிரே கடற்கரையில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது.

இது பற்றிய தகவலின் அடிப்படையில் சோலை நகர் போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் லாஸ்பேட்டை நாவற்குளம் சினேகன் நகரை சேர்ந்த சம்பந்தம் (வயது 68) என்பது தெரியவந்தது. புதுவை அரசு அச்சகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த சம்பந்தம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News