செய்திகள்
காசு வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் திருநகர் கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை அந்த வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் ரூபன் பிராங்க்ளின் தலைமையில் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது உடனடியாக சத்யமூர்த்தி, விவேக், முகேஷ்ராஜா உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 14ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பைனான்ஸ் அலுவலகத்திற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.