செய்திகள்

எந்திரத்தில் கை சிக்கி வாலிபர் பலி

Published On 2018-12-19 10:30 GMT   |   Update On 2018-12-19 10:30 GMT
எந்திரத்தில் கை சிக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் மதன்குமார் (வயது 24). இவர் கோவை சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் உள்ள இரும்பு ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு மதன்குமார் வேலை செய்து கொண்டு இருந்த போது எந்திரத்துக்குள் இடது கை சிக்கி துண்டானது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த சகஊழியர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மதன்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மதன்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News