செய்திகள்

தூத்துக்குடியில் பாமக மாணவர் சங்க செயற்குழு கூட்டம்

Published On 2018-12-17 13:18 GMT   |   Update On 2018-12-17 13:18 GMT
தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. #pmk
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. மாநில மாணவர் சங்க துணை செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட மாணவர் சங்க செயலாளர் வெற்றி, தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் சங்க துணைத் தலைவர் பிரேம்குமார் வரவேற்றார்.

மாநில மாணவர் சங்க செயலாளர் செஞ்சி ரவி, மத்திய மாவட்ட தலைவர்  ஜெயக்குமார், செயலாளர் சின்னத்துரை, வடக்கு மாவட்ட தலைவர் கருப்பசாமி, செயலாளர் வினோத் குமார், மாவட்ட அமைப்புச் செயலாளர் விசுவநாதன்,  சிவபெருமாள், காளிராஜ், மத்திய மாவட்ட பொருளாளர் சந்தனலெட்சுமி சிறப்புரையாற்றினார்கள். சுஜின் நன்றி கூறினார். 

கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பது, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதியில் பருவகால மாற்றத்தின் காரணமாக பூச்சி தாக்குதலால் அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News